திரிபோஷா உற்பத்தி மீண்டும் ஆரம்பம்!

நாட்டில் திரிபோஷா உற்பத்தியை மீளவும் ஆரம்பிப்பதற்கான நிதியுதவியை வழங்க உலக உணவுத் திட்டம் இணக்கம் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

உலக உணவுத் திட்ட அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னரே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.மூலப்பொருட்களுக்கான தட்டுப்பாடு காரணமாகவே திரிபோஷா உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது. எனினும் மேற்படி கலந்துரையாடலின் விளைவாக திரிபோஷா உற்பத்திக்கு தேவையான சோளம் உள்ளிட்ட மூலப்பொருட்களை விரைவில் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE