இலங்கை வருமாறு பிரித்தானிய சபாநாயகருக்கு வெளிவிவகார அமைச்சர் அழைப்பு!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் (Prof. G.L. Peiris) பிரித்தானியாவின் சபாநாயகர் சர் லிண்ட்சே ஹோய்லைச் (Sir Lindsay Hoyle) சந்தித்ததாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பு கடந்த 26ம் திகதி இடம்பெற்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. வெஸ்ட்மின்ஸ்டர் நாடாளுமன்றத்தின் சரியான பிரதியொன்றாகவே இலங்கை நாடாளுமன்றம் உருவானதை நினைவுகூர்ந்த அமைச்சர் பேராசிரியர் பீரிஸ், இரண்டு சட்ட சபைகளுக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்துவதில் இலங்கை ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார்.

இலங்கை தனது சட்டவாக்க நிறுவனங்களில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது குறித்து பரிசீலித்து வருவதாகவும், 1972ம் ஆண்டுக்கு முன்னர் இருந்த இருசபை சட்டவாக்க சபையை மீளப் பெறுவது குறித்து கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

குழுக்களை வலுப்படுத்துவது மற்றும் அவற்றிற்கு அதிக பொறுப்புகள் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் வலியுறுத்தினார். கொமன்வெல்த் சூழலில் ஒத்துழைப்பைக் குறிப்பிடுகையில், கொமன்வெல்த் பன்முகத்தன்மையைக் கொண்டாடுகிறது மற்றும் பயனுள்ள பணிகளைச் செய்கிறது என்று கூறினார். அமைச்சர் பேராசிரியர் பீரிஸ், சர் லின்ட்சே ஹொய்லுக்கு இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இந்நிலையில், நாடாளுமன்ற குழுக்களை வலுப்படுத்துவதும், அதிகாரமளிப்பதும் அரசாங்கத்தின் பணிகளை முறையாக ஆய்வு செய்வதற்கு வழி வகுக்கும் என்பதை சர் லிண்ட்சே ஒப்புக்கொண்டார்.

ஒரு சட்டமன்றத்தில் இரண்டாவது அவையை பொறுத்தவரை, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் அவையின் மேலாதிக்கம் முக்கியமானது என்றும், இரண்டாவது அறை மிகையாக இருக்கக்கூடாது என்றும் அவர் கருத்து தெரிவித்தார். கொமன்வெல்த் ஒரு குடும்பம் என்றும், அது ஒருவருக்கு ஒருவர் உதவுவது என்றும் அவர் ஒப்புக்கொண்டார். சர் லின்ட்சே முடிந்தவரை விரைவில் இலங்கைக்கு வருவதற்கான அழைப்பை ஏற்றுக்கொண்டார் என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE